ADDED : ஆக 12, 2011 05:33 AM

'நல்ல புத்தகம், நல்ல நண்பனை போன்றது ' என்ற வரிகள் புத்தகம் படிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிக்காட்டுகிறது.
இந்திய நூலகவியலின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதனின் பிறந்த தினத்தை போற்றும் விதமாகவும், மக்களுக்கு நூலகத்தின் பயன்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்ததும் விதமாகவும் தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில், ஆண்டுதோறும் ஆக.12ம் தேதி நூலகர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


