ADDED : ஆக 05, 2011 07:01 PM
சென்னை: சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி, திப்ரூகர் செல்லும் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு, வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) இரவு, 10.30 மணிக்கு புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்.15629), அன்று நள்ளிரவு, 12.05 மணிக்கு புறப்படும். அதே போல், 11ம் தேதி (வியாழன்) இரவு 12.30 மணிக்கு, எழும்பூரில் இருந்து திப்ரூகர் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.15929), அன்று நள்ளிரவு, 12.05 மணிக்கு புறப்படும்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.