/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கைதிசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை
திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை
திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை
திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை
திசையன்விளை : திசையன்விளை டவுன் பஞ்., பகுதியில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து ம.தி.மு.க.
இப்பட்டியலில் வசதி உள்ளவர்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் உண்மையிலேயே குடியிருக்க வீடு இல்லாமல், உழைக்க தெம்பு இல்லாமல், ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் பெயர்கள் இல்லை.எனவே உண்மையிலேயே வறுமையில் வாடுவோருக்கு தற்போது உள்ள வறுமைக்கோட்டு பட்டியலினால் எந்த பயனும் இல்லை. வறுமைக்கோட்டு பட்டியலில் பெயர் இல்லாத ஏழைகள் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கும், ஆர்.ஐ.அலுவலகத்திற்கும், பஞ்., அலுவலகத்திற்கும் அலைக்கழிக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.எனவே இதனை கருத்தில் கொண்டு உண்மையான ஏழை பயனாளிகள் பயன்பெறும் பொருட்டு பழைய வறுமைக்கோட்டு பட்டியலை ரத்து செய்து, புதுக்கணக்கெடுப்பினை நடத்தி ஆய்வு செய்து புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது.


