ADDED : ஆக 08, 2011 02:26 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி இன்னர்வீல் சங்கம், ரோட்டரி சங்கம் சார்பில் தாய்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு அரசு மருத்துவமனையில் நடந்தது.
இன்னர்வீல் சங்க தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் மீனா முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜேஸ்வரி தாஸ் வரவேற்றார்.அரசு மருத்துவமனை டாக்டர் மதுரம் பங்கேற்று தாய்பாலின் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இதில், 35 தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு தேவையான ஆடை மற்றும் தொற்று நோயில் இருந்து காப்பாற்ற நாப்கின்ங்கள் வழங்கப்பட்டது. கருத்தரங்கில், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் லதா சுந்தர், மலர், லீமா, ரோட்டரி தலைவர் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரவிச்சுந்தர், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


