நாவல் மரமும், கட்டட விரிசலும்
நாவல் பழ சீசன் நடைபெறுகிறது.
தகவல் சுரங்கம்
ஆகாகான் அரண்மனை
புனேயில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று ஆகாகான் அரண்மனையாகும்.இந்த ஆகாகான் அரண்மனை, சர் சுல்தான் முகமது ஷா மூன்றாம் ஆகாகானால் கட்டப் பட்டது. புனேயில் புகழ் பெற்ற எரவாடா சிறைப் பகுதியின் அருகில் ஆகாகான் அரண்மனை உள்ளது. பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, இந்த ஆகாகான் அரண்மனை கட்டப்பட்டது. ஆகாகானின் வாரிசுகள் 1969ல் இந்திய அரசுக்கு அரண்மனையை ஒப்படைத்தனர். இந்த ஆகாகான் அரண்மனையில் தான் காந்தியடிகள் சிறை வைக்கப்பட்டிருந்தார். 1943 ஆகஸ்ட் 15ல் மாரடைப்பால் மரணம் அடைந்த காந்தியடிகளின் தனிச் செயலாளர் மகாதேவ் தேசாயின் சமாதியும், கஸ்தூரிபாவின் சமாதியும் ஆகாகான் அரண்மனையில் உள்ளது. ஆகாகான் அரண்மனையில் தற்போது மியூசியம் இயங்குகிறது.