மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம்
மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம்
மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம்

நிலப்பட்டா, அரசு சான்றிதழ்கள், உரிமங்கள், உதவித்தொகைகள் என பலவும் காலதாமதம் செய்யப்படுவதும், ஏதாவது காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை தட்டிக் கழிப்பதும், அதன் மூலம் லஞ்சம் பெறுதல் என, பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.
மறுநாள் வழங்கினால், குறிப்பிட்ட ஊழியர் அபராதம் செலுத்த நேரிடும். காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். பொதுமக்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் உடனடியாக ரசீது வழங்கப்பட வேண்டும்.அந்த ரசீதில், அதற்கான சேவை என்றைக்கு வழங்கப்படும் என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடவேண்டும். அக்குறிப்பிட்ட நாளில் விண்ணப்பித்தவருக்கு, அதற்குரிய சேவை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விண்ணப்பத்தை நிராகரிக்க சம்பந்தப்பட்ட ஊழியருக்கோ, அதிகாரிக்கோ அதிகாரம் உள்ளது.
விண்ணப்பத்தை நிராகரிக்க போதுமான காரணங்கள், ஆவணங்கள் வழியே தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்து அரசு சேவை கிடைக்காமல் இருந்தாலோ, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், அதற்குரிய உயரதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.


