ADDED : ஜூலை 29, 2011 01:43 AM
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராம்கணேஷ்.
அரசு ஆஸ்பத்திரியில் ஆப்பரேஷன் தியேட்டர் உதவியாளராக உள்ளார். இவர்மீது, தன்னை கொடுமைப்படுத்துவதாக, அவரது மனைவி புஷ்பா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆஸ்பத்திரி நிர்வாகமும் அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.


