கொலை வழக்கில் பெயர் சேர்த்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி
கொலை வழக்கில் பெயர் சேர்த்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி
கொலை வழக்கில் பெயர் சேர்த்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி
திருவாரூர் : கொலுமாங்குடி வி.சி., பிரமுகர் கொலை வழக்கில் பேரளம் தி.மு.க., நகர செயலாளர் பன்னீர்செல்வம் குடும்பத்தினரை சேர்த்ததால் அவர் மனைவி உள்ளிட்ட நான்கு பெண்கள் விஷம் குடித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொலுமாங்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சாமிநாதன் கொலை வழக்கில் தி.மு.க., நகர செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவர் மகன்கள், உறவினர்கள் சம்பந்தப்பட்டதாக வந்த புகாரை அடுத்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் மனைவி சுசிலா(52), அவர் மகன் காளீஸ்வரன் மனைவி லதா (31), உறவினர்கள் முத்து வைரவன் மனைவி ரபி மலர் (27), ஸ்டாலின் மனைவி ரேவதி (25) ஆகிய 4 பேர் விஷம் குடித்துள்ளனர். மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை, உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் திருவாரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.