ADDED : செப் 27, 2011 04:23 AM
மேலவளவு: மேலூர் அருகே சாம்பிராணிபட்டியை சேர்ந்த விவசாயிகள் சீனிவாசன் 30, பெரியகருப்பன் 28.
இருவரும் நேற்று மேலூரிலிருந்து டி.வி.எஸ்.,ஸ்டார் சிட்டி டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) சாம்பிராணிபட்டி நோக்கிச் சென்றனர். இரவு 9 மணிக்கு செட்டியார்பட்டி வளைவு அருகே நிலைதடுமாறி, புளியமரத்தில் மோதினர். இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்