தமிழக கடலோர கட்டட அமைப்பு ஜப்பான் மாணவர்கள் ஆய்வு
தமிழக கடலோர கட்டட அமைப்பு ஜப்பான் மாணவர்கள் ஆய்வு
தமிழக கடலோர கட்டட அமைப்பு ஜப்பான் மாணவர்கள் ஆய்வு
ADDED : செப் 10, 2011 01:17 AM
ராமநாதபுரம் : தமிழக கடலோர கட்டட அமைப்பு குறித்து, ஜப்பான் மாணவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஜப்பான் சிகா பல்கலை பேராசிரியர் சூயமானி தலைமையில், ஏழு மாணவர்கள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கோடியக்கரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேஸ்வரம் கடலோரங்களில் உள்ள கட்டட அமைப்பை, பழமையான வாணிப முறைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். கடலோரங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பு முறைகள், மீனவர்களின் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் குறித்தும் ஆராய உள்ளனர். இது குறித்து பேராசிரியர் சூயமானி கூறியதாவது : தமிழக கடலோரப்பகுதிகள் மிகப்பழமையான வாணிப முறையை கொண்டவை. கரைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு முறைகள் சிறப்பாக உள்ளன. கட்டட கலையின் தன்மை குறித்து ஆராய்ச்சி நடத்தி, எங்கள் நாட்டில் செயல்படுத்த அறிக்கை சமர்ப்பிப்போம், என்றார்.