ADDED : செப் 17, 2011 01:01 AM
பழநி: லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய டி.எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பழநி டி.எஸ்.பி.,யாக இருந்தவர் முருகேசன், 58. இவர், சிவகங்கை திருப்புத்தூரில் இருந்து மாறுதலாகி, மூன்று மாதங்களுக்கு முன், இங்கு வந்தார். இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த 1985ல் கோவையில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கினார். இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.