"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை
"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை
"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை

புதுடில்லி: 'பத்மநாப சுவாமி கோவில், பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஓராண்டு காலம் தேவைப்படும்' என, ஐவர் குழு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த, இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது.
அதில், பாதாள அறைகளை திறந்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பி அறையை, மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து, மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில், பாதாள அறைகளை திறக்க தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அம்மனு மீது, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஐவர் குழு, தன் இடைக்கால அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், 'கோவில் பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை திறந்து, மதிப்பீடு செய்து முடிக்க, ஓராண்டு காலம் தேவைப்படும். மேலும், பிரச்னைக்குரிய கடைசி அறை (பி)யை இப்போது திறக்க மாட்டோம். மதிப்பீடு பணிகளுக்காக, 2 கோடியே, 99 லட்ச ரூபாய் ஒதுக்கவேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.