/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வீட்டு ஜன்னலை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளைவீட்டு ஜன்னலை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளை
வீட்டு ஜன்னலை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளை
வீட்டு ஜன்னலை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளை
வீட்டு ஜன்னலை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளை
ADDED : ஆக 05, 2011 04:23 AM
விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 12 சவரன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.கண்டமங்கலம் அடுத்த நவமால் மருதூர் சாலையை சேர்ந்தவர் சாதிக்பாஷா,30. இவர் கடந்த 2ம் தேதி இரவு 10.30 மணிக்கு தனது வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்த போது பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் உள்ள பிரோவிலிருந்த 12 சவரன் நகை, 2 வெள்ளி கொலுசு மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்தது. திருடு போன பொருட்களின் மதிப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.
இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.