ADDED : செப் 22, 2011 02:12 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும், 50 போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,களுக்கான
குற்றப்புலனாய்வு குறித்த நினைவூட்டு பயிற்சி, 46-புதூர் ஆயுதப்படை
பிரிவில் நேற்று துவங்கியது.மூன்று நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில்,
வழக்கு புலன் விசாரணை, குற்றத்தணிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏ.டி.எஸ்.பி.,க்கள் மகேந்திரன், செல்வக்குமார் தலைமை வகித்தனர்.
டி.சி.ஆர்.பி., டி.எஸ்.பி., ஆறுமுகம் பயிற்சியளித்தார்.


