Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/6 மாதங்களில் 25வது முறையாக வெடித்தது ஹவாய்த்தீவு எரிமலை

6 மாதங்களில் 25வது முறையாக வெடித்தது ஹவாய்த்தீவு எரிமலை

6 மாதங்களில் 25வது முறையாக வெடித்தது ஹவாய்த்தீவு எரிமலை

6 மாதங்களில் 25வது முறையாக வெடித்தது ஹவாய்த்தீவு எரிமலை

UPDATED : ஜூன் 13, 2025 08:02 AMADDED : ஜூன் 12, 2025 02:29 PM


Google News
Latest Tamil News
ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25வது முறையாக வெடித்துள்ளது.

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள இந்த தீவு, எரிமலைகளுக்கு புகழ் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் ஆண்டு முழுவதும் இருக்கும். இங்குள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியா ஒன்றாகும்.

1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் வெடித்து சிதறியது. எரிமலைக் குழம்பில் 700 வீடுகள், சுற்றுலா மையங்கள், சாலைகள் சேதமடைந்தன. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் வெடித்து சிதறியது. அப்போதும் பெரும் சேதம் ஏற்பட்டது.

தற்போது, கிலாவியா எரிமலை வெடித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25வது முறையாக வெடித்துள்ளது. அந்த எரிமலையின் வடக்கு துவாரத்தின் வழியாக வெளியேறிய எரிக்குழம்புகள் 330 அடிக்கு சீறி உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:

கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது சீற்றம் பெற்று, எரிக்குழம்புகள் வெளியேறி வருகிறது. கிலாவியா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம், என்றனர்.

கடந்த 200 ஆண்டுகளாக தொடர்ந்து வெடித்து வருகிறது. ஹவாய் எரிமலை ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us