ADDED : செப் 11, 2011 12:58 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன்
தலைமை வகித்தார். கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன்,
இயக்குநர்கள் பூபதி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர்
அப்ரோஸ், யூத் எக்ஸ்னோரா இன்டர் நேஷனல் ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம் ,
பிரியா ஆகியோர் பேசினர்.விழாவில் யூத் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் மாநில
ஒருங்கிணைப்பாளர் சந்தானம் யூத் எக்ஸ்னோரா அமைப்பை துவக்கி வைத்தார். யூத்
எக்ஸ்னோரா அமைப்பு நிர்வாகிகள் செய்யப்பட்டனர்.