/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடிபணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி
பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி
பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி
பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி
திருப்பூர் : 'வாகன விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது; பரிகாரம் செய்ய வேண்டும்,' எனக்கூறி வாலிபரை ஏமாற்ற முயற்சித்த ஜோதிடரை, பொதுமக்கள் பிடித்து 'தர்ம அடி' கொடுத்ததால், திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மீண்டும் திருப்பூர் குமரன் சிலை அருகே வந்த ஜோதிடர், விஜயை போனில் அழைத்துள்ளார். அங்கு வந்த விஜயிடம், ''ஆனைமலை கோவிலில் உங்களுக்கு பூஜை செய்தபோது, ஐந்தில் ஒரு விளக்கு அணைந்து விட்டது; உயிர் பலியை தடுக்க முடியாது; சிறப்பு பூஜை மற்றும் எந்திரம் உருவாக்க வேண்டும்; அதற்கு 5,000 ரூபாய் செலவாகும்,'' என எச்சரித்துள்ளார். அப்போது, சுதாகரித்துக் கொண்ட விஜய்; '' பரிகாரம் வேண்டாம், நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு,'' என கூறியுள்ளார். இதனால்,இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் ஜோதிடருக்கு தர்ம அடி கொடுத்து சிறை வைத்தனர். உடனே, ஜோதிடர் அருண்குமார், தனது நண்பரை அழைத்து அவரிடமிருந்து 1,600 ரூபாயை பெற்று விஜயிடம் கொடுத்தார். இதையடுத்து, ஜோதிடரை மக்கள் விடுவித்தனர்.


