Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகளிர் குழுக்களுக்கு ரூ. 108 கோடி கடன்

மகளிர் குழுக்களுக்கு ரூ. 108 கோடி கடன்

மகளிர் குழுக்களுக்கு ரூ. 108 கோடி கடன்

மகளிர் குழுக்களுக்கு ரூ. 108 கோடி கடன்

ADDED : ஆக 29, 2011 01:01 AM


Google News
ஈரோடு: ''மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இந்தாண்டு 108 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.

ஈரோடு, குமலன்குட்டை பூமாலை வணிக வளாகத்தில் வங்கியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் காமராஜ் பேசியதாவது: ஒவ்வொரு பகுதிக்கும் கள அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களின் கோரிக்கைகள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உடனடி தீர்வு காண வேண்டும். அதில் ஏற்படும் சந்தேகம், இடர்பாடுகளை தீர்க்கவே இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணித்து, மாதாந்திர கூட்டம், வங்கிகளின் செயல்பாடுகள், மகளிர் குழுக்களில் உறுப்பினர்களை சேர்த்தல், புதிய சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், சுய தொழில் துவக்க உரிய அறிவுரை உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 74 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியும், 184 குழுக்களுக்கு பொருளாதார கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் எந்த தொழில் ஏற்றதாக உள்ளதோ, அத்தொழிலை துவக்க, குழுக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மலைகிராமங்களில் அதிகளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்க வேண்டும். மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்க 108 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை எட்ட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுய தொழில் புரிந்து, வருவாய் ஈட்டி, வாழ்வில் உயர்நிலை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நபார்டு வங்கி துணை மேலாளர் சந்தானம், வேளாண் இணை இயக்குனர் அக்பர், மகளிர் திட்ட அலுவலர் அமல்ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us