ADDED : ஆக 01, 2011 12:17 PM
கோவை : திமுக வினர் மீது பொய் வழக்கு போட்டு வரும் தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலரும், திமுக முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலான 2300 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 250 பெண்களும் அடங்குவர்.