Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி

ADDED : ஜூன் 06, 2025 12:00 PM


Google News
Latest Tamil News
மதுரை: ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

வரும் ஜூன் 8ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் தமிழக பா.ஜ.,வின் அமைப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

இதற்கான பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை விட்டு தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகம் சட்டம் ஒழுங்கில் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி செய்ய வேண்டும்.

ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி. அவர் நல்ல விஷயங்களில் தலையீடுவது நல்லது தான். அமித்ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை.

ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. தே.மு.தி.க.,வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு. மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள். தி.மு.க.,விற்கு ஷா என்றாலே பயம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us