/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்
சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்
சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்
சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த மாட்டிலாம்பட்டியில் சாலையோரங்களில் அதிக அளவில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், ஊருக்கு நுழைவு வாயில் பகுதியில் துர் நாற்றம் அடித்து வருகிறது.
தொலை தூரங்களில் செல்லும் வாகனங்கள் மாட்டிலாம்பட்டி பைபாஸ் சாலைகளில் நிறுத்து ஓய்வு எடுத்து செல்வார்கள். இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் பலர் உணவுக்காகவும் நிறுத்தி சாப்பிட்டு செல்வார்கள். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் அதிக அளவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டிலாம்பட்டி பைபாஸ் சாலை பிரியும் பகுதி மற்றும் காரிமங்கலத்துக்கு செல்லும் பிரிவு சாலையோரங்களில் அதிக அளவில் குப்பை கழிவுகள், அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவைகள் கொட்டப்படுவதால், அந்த வழியாக சாலையில் செல்வோர் துர் நாற்றத்தை சகிக்க முடியாமல் செல்கின்றனர். வாகனங்களில் சாலையை கடந்து செல்வோரும் முகத்தை சுளித்தபடி செல்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் குப்பை கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


