ADDED : செப் 09, 2011 02:25 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே பைக் மோதியதில், முதியவர் ஒருவர் பரிதாபமாக
பலியானார்.
தர்மபுரி அடுத்த இண்டூர் கொனக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன்
(70). நேற்று இண்டூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பென்னாகரம் - தர்மபுரி சாலையை
கடந்த போது, பென்னாகரத்திலிருந்து தர்மபுரி நோக்கி வந்த பைக், மாரியப்பன்
மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை, சிகிச்சைக்கு தர்மபுரி அரசு
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இண்டூர்
போலீஸார் விசாரிக்கின்றனர்.