ஆந்திர அரசுக்கு மேலும் ஒரு நெருக்கடி
ஆந்திர அரசுக்கு மேலும் ஒரு நெருக்கடி
ஆந்திர அரசுக்கு மேலும் ஒரு நெருக்கடி
ADDED : ஆக 20, 2011 09:32 AM
ஐதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தப்பட்டிருப்பதையடுத்து, அவருக்கு ஆதரவான ஆந்திர காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று ஐதராபாத்தில் உள்ள ஜெகன் வீட்டில் அவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அப்போது ஜெகன் மீதான சி.பி.ஐ., நடவடிக்கை தொடருமானால் தாங்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என்றும் தெரிவித்தனர்.


