
கடித்துக் குதறிய எலி...
''இப்தார் நோன்பு நிகழ்ச்சியிலும் கோஷ்டிப் பூசல் வெடிச்சிருச்சுங்க...!'' என, விவாதத்தை துவக்கினார் அந்தோணிசாமி.''மேல சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''இதை கேள்விப்பட்டு, நிகழ்ச்சியை விஜயகாந்த் ரத்து செஞ்சுட்டாருங்க... கடைசியில, கட்சித் தலைமை அலுவலகத்துல தான் விருந்து நடந்தது...'' என, விளக்கினார் அந்தோணிசாமி.
''ஆனா, 'சிக்னல்' கிடைக்காததால, ரயில் ரொம்ப நேரம் பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷன்லயே நின்னுடுச்சு பா... வெறுத்துப்போன மகன்கள், அங்கேயே இறங்கிட்டாங்களாம்... கொட்டுற மழையில விஜயகாந்த் அங்க போனப்ப, கார் நின்னு போச்சு... கடைசியில, வேற காரை வரவழைச்சு, வீட்டுக்குப் போயிருக்கார்... பெரிய போராட்டத்துக்கு அப்பறம், தாமதமா வீடு போய் சேர்ந்ததால, பிறந்தநாளை குறித்த நேரத்துல கொண்டாட முடியலையாம் பா...'' என, நடந்த சம்பவத்தை விளக்கினார் அன்வர்பாய்.
''பாளையங்கோட்டை சிறையில பாம்பு, பல்லிகள் இருக்கோ இல்லையோ... எலித் தொல்லைகள் ஓவரா இருக்காம் ஓய்...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் குப்பண்ணா.


