பி.எட்., கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு
பி.எட்., கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு
பி.எட்., கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு
இது குறித்து, அரசு வெளியிட்ட உத்தரவு: சுயநிதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், அதிகக் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கட்டணத்தை முறைப்படுத்த, சுயநிதி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு, கட்டணத்தை நிர்ணயிக்குமாறு தமிழக அரசை, இந்திய நிவாரண கவுன்சில் கேட்டுக்கொண்டது.
இக்குழு நிர்ணயிக்கும் கட்டணம், மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். அதன் பின், கட்டணத்தை மாற்றியமைக்க கல்லூரி விரும்பினால், இக்குழுவிடம் விண்ணப்பிக்கலாம். இக்குழு, கட்டணம் நிர்ணயித்த பின், அதற்கு அதிகமாக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பது நன்கொடை வசூலிப்பதற்கு ஒப்பாகும். இவ்வாறு, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு விவரம்
தலைவரைத் தவிர்த்து, உயர் கல்வித் துறைச் செயலர், நிதிச் செயலர் அல்லது அவரது பிரதிநிதி, பள்ளிக் கல்வி என்.எஸ்.எஸ்., இணை இயக்குனர், அரசால் நியமிக்கப்படும் கணக்காளர், 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' பேராசிரியர் சண்முகம், தருமபுரி வருவான் வடிவேலன் பி.எட்., கல்லூரி தாளாளர் வடிவேலன், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.