/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த உத்தேச செலவுக்கு மாநகராட்சி ரூ.25 லட்சம் அனுமதிதூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த உத்தேச செலவுக்கு மாநகராட்சி ரூ.25 லட்சம் அனுமதி
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த உத்தேச செலவுக்கு மாநகராட்சி ரூ.25 லட்சம் அனுமதி
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த உத்தேச செலவுக்கு மாநகராட்சி ரூ.25 லட்சம் அனுமதி
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த உத்தேச செலவுக்கு மாநகராட்சி ரூ.25 லட்சம் அனுமதி
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலை நடத்திட 25 லட்ச ரூபாய் உத்தேசமாக செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் பழைய எல்கை பகுதியுடன் புதியதாக தூத்துக்குடி ரூரல், சங்கரப்பேரி, மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளின் எல்கைகளை இணைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளின்படி 2011 உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு உத்தேச செலவினம் 25 லட்சம் ஆகும் என்பதால் இந்த செலவினத்தை மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவு செய்ய அனுமதிகோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள மூன்று வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் அதனை கண்டம் செய்து, புதிய மாநகராட்சி எல்லை விரிவதால் புதியதாக 2 வாகனம் வாங்குவதற்கு 40 லட்ச ரூபாய் அனுமதி கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மாநகருக்கு வரும் குடிநீர் பிரதான 2வது பைப்லைன் குழாயில் வாகைக்குளம் அருகில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தன்னோட்ட குடிநீர் குழாயான 600 மீட்டர் ஆர்.சி.சி குழாயில் 500 மீட்டர் தூரத்திற்கு குழாய் உடைப்பு மற்றும் காலர் சேதமடைந்துள்ளதால் மாநகருக்கு வரும் குடிநீர் அளவு குறைந்து வருகிறது. பலமுறை சீரமைப்பு செய்தும் சரி செய்ய இயலாததால் மக்கள் நலன் கருதி குடிநீர் விநியோகத்தின் அவசியத்தை முன்னிட்டு சேதமடைந்த குழாய்களுக்கு பதில் புதிய குழாய் அமைக்க 40 லட்ச ரூபாய் அனுமதிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.