Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Latest Tamil News
புதுடில்லி: முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

2025 - 26ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கணினி மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வுகள், காலை, மதியம் என இரு ஷிப்டுகளாக நடைபெறும் என்றும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், முதுநிலை நீட் தேர்வை 2 ஷிப்ட்களாக நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவுக்கு தடை விதித்ததுடன், இந்த தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும். 2 ஷிப்ட்கள், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்துவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்று தங்களது உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us