/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்
கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்
கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்
கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்
ஆழ்வார்குறிச்சி: கீழமாதாபுரத்தில் நேற்று முன்னாள் முப்படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது.தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய முன்னாள் படைவீரர்களின் தலைமை அலுவலக வெட்ரன் ஹெல்ப் லைன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஆர்.சிவநாதன், லெப்டினன்ட் கர்னல் ரோஹித் மிஸ்ரா ஆகியோர் அறிவுரையின் பேரில் கீழமாதாபுரத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.முகாமிற்கு நாயக் செல்வம் தலைமை வகித்தார்.
பெங்களூரை சேர்ந்த நாயக் செந்தில்குமார், நாயக் சாமுவேல், நாயக் சிவக்குமார் ஆகியோர் பிரச்னை மனுக்களுக்கு உயரதிகாரிகளிடம் இருந்து உடனடி பதிலை ஆன்லைன் மூலம் பெற்று தந்தார்கள். முன்னதாக முகாம் அலுவலகத்தை அதிகாரி கேப்டன் டேவிட் முன்னிலையில் நாயக் செல்வம் திறந்து வைத்தார். கிராமப்புறங்களில் வாழும் முப்படை முன்னாள் ராணுவ வீரர்களுக்காக முகாம் நடத்தப்பட்டது. நாயக் ஐசக் ஜார்ஜ் நன்றி கூறினார்.


