ADDED : ஜூலை 13, 2011 01:51 AM
ஊட்டி : தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட
செயற்குழு கூட்டம், ஊட்டியில் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட தலைவர்
விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் முகமது அனிபா, மாவட்ட பொருளாளர்
குமார், வட்டக் கிளை தலைவர்கள் ராஜூ (குன்னூர்), ஸ்ரவேல் (குந்தா),
பொருளாளர் ரமேஷ், ஊட்டி வட்டக்கிளை செயலாளர் ரவி, துணைத் தலைவர்
விசுவநாதன், கூடலூர் வட்டக்கிளை துணை செயலர் ஸ்டேன்லி, செயலா ளர்
ராதாகிருஷ்ணன் பேசினர். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசுக்கும்,
அமைச்சர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வரும் செப்., 7ம் தேதி
சென்னையில் நடக்கும் பேரணியில் திரளாக பங்கேற்பது உட்பட சில தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சங்கர் நன்றி கூறினார்.