Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாளை கோவை வருகை

அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாளை கோவை வருகை

அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாளை கோவை வருகை

அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாளை கோவை வருகை

ADDED : ஜூலை 26, 2011 12:52 AM


Google News

கோவை : விசா பெற விண்ணப்பிப்போர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க, அமெரிக்க தூதரக அதிகாரிகள், நாளை கோவை வருகின்றனர்.

இது குறித்து சென்னை, அமெரிக்க தூதரக அலுவலக அறிக்கை:விசா பெற விண்ணப்பிப்போர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையில், 'கன்சுலர் ரோட் ÷ஷா' என்ற பெயரில் சிறப்புக் கூட்டம், நாளை கோவையிலும், வரும் 29ல் மதுரையிலும் நடத்தப்படுகிறது.

மாணவர் விசா, பணி விசா, அமெரிக்க குடியுரிமை சர்வீஸ், வணிக விசா மற்றும் வேற்று நாட்டில் குடிபுகுந்தவருக்கான விசா உள்ளிட்டவை குறித்து, கோவை மற்றும் மதுரையிலுள்ள மக்களை நேரடியாக சந்தித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.



நாளை காலை 9 முதல் 11 மணி வரை, பீளமேடு, பி.எஸ்.ஜி., மேலாண்மைக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் மாணவர் விசா, கல்வி விசா, ஊழியர் விசா, எச்.1.பி., விசா., எல் விசா, பி1/பி2 விசா உள்ளிட்டவை குறித்தும், மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை, அவிநாசி ரோடு, ஜி.ஆர்.டி., கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில், வேற்று நாட்டில் குடிபுகுந்தவருக்கான விசா உட்பட, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், 'கொடிசியா' வுடன் இணைந்து வர்த்தக விசா பெறும் முறைகள் குறித்தும், தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.



மதுரை: கோவையைத் தொடர்ந்து, வரும் 29ம் தேதி மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில், காலை 9 முதல் பகல் 12 மணி வரையும், அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை 3 மணிக்கு காமராஜர் ரோட்டிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக வளாகத்தில் நடக்கும் வர்த்தக கூட்டத்திலும், தூதரக அதிகாரிகள் பேச உள்ளனர்.

விவரங்களுக்கு, சென்னையிலுள்ள அமெரிக்க தூதர அலுவலகத்தை, 044- 2857 4000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us