Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புகாரில் கூறியவர்களை கைது செய்யக்கோரி விருத்தாசலம் அருகே பிணத்துடன் மறியல்

புகாரில் கூறியவர்களை கைது செய்யக்கோரி விருத்தாசலம் அருகே பிணத்துடன் மறியல்

புகாரில் கூறியவர்களை கைது செய்யக்கோரி விருத்தாசலம் அருகே பிணத்துடன் மறியல்

புகாரில் கூறியவர்களை கைது செய்யக்கோரி விருத்தாசலம் அருகே பிணத்துடன் மறியல்

ADDED : செப் 04, 2011 02:00 AM


Google News
விருத்தாசலம்:கருவேப்பிலங்குறிச்சியில் புகாரில் கூறிய அனைவரையும் கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்தவர் ராமு, 55; தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இரவு வாட்ச்மேன். இவர் கடந்த மாதம் 18ம் தேதி வங்கி முன் மயங்கிக் கிடந்தார்.இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் ராமு மகன் பாண்டியன் கொடுத்த புகாரில் அதே கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், ராமகிருஷ்ணன், ராமமூர்த்தி, கலைமணி, கோவிந்தசாமி, முத்துகுமார், வரதராஜபெருமாள், ராமசந்திரன், கணேசன், ராமானுஜம், மணிகண்டன் ஆகியோர் தனது தந்தையை முன்விரோதம் காரணமாக அடித்து தாக்கியுள்ளதாக புகார் தெரிவித்திருந்தார்.அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ராமதாஸ், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து மற்றவர்களைத் தேடி வந்தனர்.இந்நிலையில் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமு நேற்று முன்தினம் இறந்தார். அதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராமுவின் உடல் நேற்று மாலை கருவேப்பிலங்குறிச்சி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது ராமுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புகாரில் கூறியுள்ள அனைவரையும் கைது செய்யக்கோரி கருவேப்பிலங்குறிச்சி சாலையில் பிணத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., அறிவழகன், இன்ஸ்பெக்டர் சீராளன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us