ஹசாரே கைது: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் ரகளை
ஹசாரே கைது: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் ரகளை
ஹசாரே கைது: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் ரகளை

அன்னா ஹசாரேயின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் இறங்கின.
லோக் சபாகாலையில் லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், குருதாஸ் தாஸ் குப்தா, சரத் யாதவ் ஆகிய மூன்று பேரும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து ஹசாரே கைது குறித்து, சபையில் விவாதம் நடத்த வேண்டுமென்று கோரினர். அவர்களது கோரிக்கையும், நோட்டீசும் நிராகரிக்கப்படுவதாக, சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார். இதனால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மட்டும் பேசுவதற்கு அனுமதியளிப்பதாக மீராகுமார் கூறவே, சமாஜ்வாடி கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, 'எங்களுக்கெல்லாம் வாய்ப்பளிக்க மறுப்பது ஏன்' என்று கேட்டு ரகளை செய்தனர்.
ராஜ்ய சபாவிலும் காலையில் கடும் அமளி ஏற்பட்டது. சபைத் தலைவர் அன்சாரி எவ்வளவோ எடுத்துக் கூறியும், சபையில் அமைதி திரும்பாத நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி ஒத்திவைக்கப்பட்டது. பிறகு கூடிய போதும் இதே நிலை நீடிக்கவே, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சபையை முடக்க திட்டம்:மதியம் 2 மணியளவில், பார்லிமென்டின் பா.ஜ., அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஆலோசனை நடத்தினர். இடதுசாரி கட்சித் தலைவர்கள், சமாஜ்வாடி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அத்வானி, குருதாஸ் தாஸ் குப்தா, ராஜா, யெச்சூரி, தூம், மைசூரா ரெட்டி, சைலேந்திர குமார், ரகுவன்ஸ் பிரசாத், சரத் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.,வும், பகுஜன் சமாஜ் கட்சியும் தலைமையை தொடர்பு கொண்டு, பிறகு தங்களது முடிவைக் கூறுவதாகத் தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.