/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சுகிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு
கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு
கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு
கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு
புதுக்கோட்டை: ''கிராமப் பகுதிகள் முன்னேற வேண்டும் என்றால் ஜாதி, மத, அரசியல் பாகுபாடுகள் அகலவேண்டும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே பெருங்குடி சமுதாயக்கூடம் தான் பெரிதாக இருக்கும் என நினைக்கிறேன். பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த அனைத்துதரப்பு மக்களும் இந்த சமுதாயக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற திட்டங்கள் மூலம் கிராமப் பகுதிகள் முன்னேற வேண்டும் என்றால் ஜாதி, மத, அரசியல் பாகுபாடுகள் அகலவேண்டும். இதற்கு பெருங்குடி சமுதாயக்கூடம் முன்னுதாரணமாக அமையவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுந்தரம், சுப்புராம், நகர்மன்ற கவுன்சிலர் இப்ராஹீம் பாபு உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். அறந்தாங்கி அடுத்த வல்லவாரி கிராமத்தில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தையும் மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று திறந்துவைத்தார்.


