ADDED : செப் 07, 2011 11:00 PM
நெல்லிக்குப்பம்:பைக் மோதி முதியவர் இறந்தார்.நெல்லிக்குப்பம் ஆரோக்கியசாமி
தெருவைச் சேர்ந்தவர் கலீல் ரஹ்மான், 70; விவசாயி.
நேற்று முன்தினம்
கீழ்பட்டாம்பாக்கத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது
பின்னால் வேகமாக வந்த மோட்டார் பைக் மோதியதில் கலீல் ரஹ்மான்
படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
அவர் இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.