பாண்டே கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் செல்ல குஜராத் அரசு முடிவு
பாண்டே கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் செல்ல குஜராத் அரசு முடிவு
பாண்டே கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் செல்ல குஜராத் அரசு முடிவு
UPDATED : செப் 13, 2011 05:02 PM
ADDED : செப் 13, 2011 05:01 PM
ஆமதாபாத்: முன்னாள் அமைச்சர் ஹரேன்பாண்டே கொலை வழக்கை மறுவிசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை முறையிடுவோம் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன்பாண்டே , கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் மாஜி அமைச்சரின் மனைவி ஜக்ருதிபாண்டே என்பவர் ,இந்த வழக்கினை மறுவிசாரணை செய்ய கோரி கோர்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆக.29-ம் தேதி மறுவிசாரணைக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இந்த வழக்கினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை முறையீடு செய்வோம் என அரசு வழக்கறிஞர் ஜெ.எம்.பன்சால் கூறினார்.