ADDED : செப் 15, 2011 06:31 AM
மதுரை : மதுரையில், அதிகாலையில் போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
பயிற்சிக்காக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து வல்லநாடு துப்பாக்கி சுடு பயிற்சி தளத்திற்கு போலீசாரை ஏற்றி சென்ற போலீஸ் வாகனம், மதுரை பழங்காநத்தத்தில் எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ராஜபாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


