Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பா.ஜ.,வுடன் கூட்டணிஇல்லை: கல்யாண் சிங்

பா.ஜ.,வுடன் கூட்டணிஇல்லை: கல்யாண் சிங்

பா.ஜ.,வுடன் கூட்டணிஇல்லை: கல்யாண் சிங்

பா.ஜ.,வுடன் கூட்டணிஇல்லை: கல்யாண் சிங்

ADDED : செப் 02, 2011 11:09 PM


Google News

முசாபர் நகர்:'அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி அமைத்தோ அல்லது இணைந்தோ போட்டியிடாமல் தனித்துப் போட்டியிட உள்ளோம்' என்று ஜன் கிராந்தி கட்சித் தலைவர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.உ.பி., மாநில முன்னாள் முதல்வரும், கிராந்தி கட்சித் தலைவருமான கல்யாண் சிங், தியோபந்த் அருகே நிருபர்களிடம் கூறுகையில், 'உ.பி., மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ளது.

பா.ஜ., கட்சி மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தோ அல்லது அந்த கட்சியில் இணைந்தோ போட்டியிடாமல் தனித்துப் போட்டியிட உள்ளோம். எங்கள் கட்சி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இரண்டாவது வேட்பாளர்களின் பட்டியல் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us