/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டுகுடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு
குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு
குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு
குடந்தை அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் திருட்டு
கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆசிரியை வீட்டின் பூட்டிய கதவை நெம்பி ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வீட்டிற்குள் இருந்த மூன்று பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த தங்கநகை, வெள்ளிப்பாத்திரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என அனைத்தும் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோக்களில் தங்க நெக்லஸ் 2, வளையல் 6, தோடு 5, கைசெயின் 4, மோதிரம் 5, செயின் 3, ஜிமிக்கி 4 என 30 பவுன் நகைகள், மற்றும் வெள்ளிப்பாத்திரங்கள் குத்துவிளக்கு 1, கொலுசு 3 ஜோடி, குங்குமச்சிமிழ் 2, டம்ளர் 2 என அரைகிலோ வெள்ளிப்பாத்திரங்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ஏழு லட்சம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில், நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீஸ் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.


