Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வாழை சாகுபடி பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

வாழை சாகுபடி பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

வாழை சாகுபடி பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

வாழை சாகுபடி பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

ADDED : ஜூலை 31, 2011 01:13 AM


Google News

தேனி : வாழை சாகுபடி பாதிப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தில் வாழை சாகுபடிக்கு ஏக்கருக்கு 3 லட்சத்து 91 ஆயிரத்து 644 ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வந்தது. வாழை சாகுபடிக்கான செலவுகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இழப்பீட்டு தொகையினை அரசு 5 லட்சத்து 29 ஆயிரத்து 800 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.



இத்திட்டத்தில் சேர விவசாயிகள் ஏக்கருக்கு 39 ஆயிரத்து 245 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். வங்கி கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகளுக்கு அரசு 55 சதவீதம் மானியம் வழங்குகிறது. மானியம் போக விவசாயிகள் ஏக்கருக்கு 19 ஆயிரத்து 603 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். கடன் பெறாத விவசாயிகளுக்கு அரசு பிரிமியம் தொகையில் 55 சதவீதம் மானியம் வழங்குகிறது. இவர்கள் 17 ஆயிரத்து 642 ரூபாய் பிரிமியம் செலுத்தினால் போதும்.



குறைப்பு: வெங்காயத்திற்கு அரசு இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு 95 ஆயிரத்து 684 ரூபாயில் இருந்து 84 ஆயிரத்து 684 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிரிமியம் தொகையில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம், கடன் பெறாத விவசாயிகளுக்கு 55 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us