Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/3,363 உள்ளாட்சி பதவி: 6,775 பேர் வேட்புமனு

3,363 உள்ளாட்சி பதவி: 6,775 பேர் வேட்புமனு

3,363 உள்ளாட்சி பதவி: 6,775 பேர் வேட்புமனு

3,363 உள்ளாட்சி பதவி: 6,775 பேர் வேட்புமனு

ADDED : செப் 28, 2011 12:47 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3,363 உள்ளாட்சி பதவிகளுக்கு; நேற்று ஒரே நாளில் 4,986 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உள்ளாட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, அமாவாசை நாளான நேற்று காலை முதல் அதிகளவில் வேட்பாளர்கள் குவிந்தனர்.

மாவட்ட அளவில் மேயர் பதவிக்கு 10 பேர், மாநகராட்சி கவுன்சிலருக்கு 168, நகராட்சி தலைவருக்கு ஐந்து பேர், நகராட்சி கவுன்சிலருக்கு 145, மூன்றாம் நிலை நகராட்சி தலைவருக்கு ஒருவர், கவுன்சிலருக்கு 15, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 47, யூனியன் கவுன்சிலருக்கு 473, டவுன் பஞ்சாயத்து தலைவருக்கு 142, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 1,063, பஞ்சாயத்து தலைவருக்கு 628, பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 2,289 பேர் என மொத்தம் 4,986 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

கடந்த 22ம் தேதி துவங்கி நேற்று வரை ஒரு மேயர் பதவிக்கு 16 பேர், 60 மாநகராட்சி கவுன்சிலர் இடங்களுக்கு 191 பேர், மூன்று நகராட்சி தலைவர் பதவிக்கு 12 பேர், 84 நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 182 பேர், ஒரு மூன்றாம் நிலை நகராட்சி தலைவர் பதவிக்கு இருவர், அங்குள்ள 18 கவுன்சிலர் இடங்களுக்கு 32 பேர், 42 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 183 பேர், 630 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 1,325 பேர், 19 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 60 பேர், 183 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 594 பேர், 225 பஞ்சாயத்து தலைவர் இடங்களுக்கு 803 பேர், 2,097 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடங்களுக்கு 3,375 பேர் என, 3,363 இடங்களுக்கு 6,775 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.வரும் 30ம் தேதி வேட்பு மனுக்களை ஆய்வு செய்தலும், அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுதலும் நடக்கிறது. அக்டோபர் 17, 19ம் தேதிகளில் தேர்தலும், 21ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us