ADDED : செப் 26, 2011 10:41 PM
திண்டிவனம் : கிணற்றில் விழுந்த சிறுவன் இறந்தான்.
திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாபு மகன் விஜயபாபு,5. வெள்ளிமேடுபேட்டை அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் 1 மணிக்கு விஜயபாபு மேல்பேரடிக்குப்பத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து மூழ்கினான். திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை கிணற்றில் தேடி பார்த்தும், சிறுவனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை சிறுவன் உடல் கிணற்றில் மிதந்தது. இது குறித்து ரோஷணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.