Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தைக்கு வெட்டு : பேட்டை வாலிபர் கைது

மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தைக்கு வெட்டு : பேட்டை வாலிபர் கைது

மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தைக்கு வெட்டு : பேட்டை வாலிபர் கைது

மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தைக்கு வெட்டு : பேட்டை வாலிபர் கைது

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

திருநெல்வேலி : பேட்டையில் மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேட்டை பாண்டியாபுரம் தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(62). கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஆவுடையம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் வீட்டில் பீடி சுற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன்(27) அருணாசலத்தின் மகளை கிண்டல் செய்துவந்தார். இதை அருணாசலம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த மாரியப்பன் அருணாசலத்தை அரிவாளால் வெட்டினார். அருணாசலத்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அருணாசலம் பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் விசாரணை நடத்தி மாரியப்பனை கைது செய்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us