Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்

கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்

கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்

கீழ ஆம்பூரில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1.80 லட்சம் சுழல்நிதி வழங்கல்

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

திருநெல்வேலி : கீழ ஆம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 1.80 லட்சம் ரூபாய் சுழல்நிதி வழங்கப்பட்டது.

கீழ ஆம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடந்தது. சேரன்மகாதேவி கூட்டுறவுச்சங்க துணைப்பதிவாளர் ரியாஜ் அகமது தலைமை வகித்து 3 சுய உதவிக்குழுக்களுக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் வீதம் 1.80 லட்சம் ரூபாய் சுழல்நிதி வழங்கினார். அவர் பேசும் போது, ''உறுப்பினர்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தக்கூடியவர்களாகவும், பணியாளர்கள் சிறந்த சேவை செய்பவர்களாகவும் இருந்தால் சங்கம் வளர்ச்சி பெறும். இச்சங்கத்தில் விவசாய மையம், பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது.



நீரின் தன்மை, நிலத்திற்கு ஏற்ப விவசாயம் செய்வதை விவசாய மையம் பரிந்துரைக்கும். பொதுசேவை மையம் மூலம் பட்டா நகல் எடுத்தல், மாணவர்களின் மார்க் பட்டியல் பெறுதல், மின்கட்டணம் செலுத்துதல், ரயில் டிக்கட் எடுத்தல், செல்போன் ரீசார்ஜ் செய்தல், படம் எடுத்தல், கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட பணிகளை வீட்டில் இருந்தபடி செய்யலாம்'' என்றார். சங்க செயலாளர் சித்திரை வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனிஅலுவலர் ஸ்டான்லி, உதவி வளர்ச்சி அலுவலர் பரமசிவன், மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் கசமுத்து, முன்னாள் தலைவர் முத்தையா பிள்ளை, ராமசுப்பிரமணிய அய்யர், லட்சுமணப்பெருமாள், பஞ்., உறுப்பினர் அரிகரன், உறுப்பினர் சிவராமலிங்கம், மனித உரிமைக்கழக அமைப்பாளர் கல்யாணசுந்தரம், விவசாயிகள் சங்கத்தலைவர் சட்டநாதன், முத்துலட்சுமி, மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எழுத்தர் தேவசகாயம் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us