/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/நரேந்திரமோடி உண்ணாவிரதம் கன்னியாகுமரி கோயிலில் வழிபாடுநரேந்திரமோடி உண்ணாவிரதம் கன்னியாகுமரி கோயிலில் வழிபாடு
நரேந்திரமோடி உண்ணாவிரதம் கன்னியாகுமரி கோயிலில் வழிபாடு
நரேந்திரமோடி உண்ணாவிரதம் கன்னியாகுமரி கோயிலில் வழிபாடு
நரேந்திரமோடி உண்ணாவிரதம் கன்னியாகுமரி கோயிலில் வழிபாடு
ADDED : செப் 18, 2011 01:00 AM
கன்னியாகுமரி:குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உண்ணாவிரதம் வெற்றி பெற வேண்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடக்கிறது.குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு 'சத்பவனா மிஷனை' தொடங்கி வைத்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த உண்ணாவிரதம் வெற்றியடையவேண்டி கன்னியாகுமரியில் உள்ள குஜராத் பவன் சார்பில் காலையில் சிறப்பு பிரார்த்தனையும், பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் மூன்று நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குஜராத் பவன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.