அடுத்தடுத்து குண்டர் சட்டம்: "கிலி'யில் தி.மு.க., நிர்வாகிகள்
அடுத்தடுத்து குண்டர் சட்டம்: "கிலி'யில் தி.மு.க., நிர்வாகிகள்
அடுத்தடுத்து குண்டர் சட்டம்: "கிலி'யில் தி.மு.க., நிர்வாகிகள்
மதுரை: மதுரையில் அடுத்தடுத்து தி.மு.க.,வினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதால், தனித்து போட்டியிட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கலக்கத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
ஆட்சி மாற்றத்திற்கு பின், நிலஅபகரிப்பு, இட ஆக்கிரமிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
தேர்தலை வழிநடத்திச் செல்லக்கூடிய முக்கிய 'தலைகள்' எல்லாம் சிறையில் இருப்பதாலும், தங்களிடம் அதிகாரம் இல்லாத நிலையிலும், தேர்தல் 'பிரசாரம்' செய்து எப்படி வெற்றி பெற முடியும்? என்று தி.மு.க.,வினர் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, ஜாமினில் வெளிவரும் தி.மு.க.,வினரை மீண்டும் கைது செய்தால், அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும்படி கட்சித் தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் இது சர்ச்சையை கிளப்பி, அது தி.மு.க.,வினருக்கு சாதகமாகக்கூட மாற வாய்ப்புண்டு என, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் ஜாமினில் வெளிவருவதற்கு முன்பே, சிறையிலேயே அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படுவது தொடர்கிறது.