ADDED : செப் 17, 2011 03:21 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி தாசில்தார் ரமேஷ்பாபு, துணை தாசில்தார் வரதராஜு,
ஆர்.ஐ., ரவிக்குமார் உள்ளிட்ட வி.ஏ.ஓ.,க்கள், சுவேத நதியில், நேற்று
அதிகாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது, 74.கிருஷ்ணாபுரம், அண்ணாநகர்
பகுதி வழியாக செல்லும் சுவேதநதியில் மணல் அள்ளி கடத்திச் செல்ல முற்பட்ட
டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், லத்துவாடி சுவேத நதியில் மணல்
கடத்திச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர்.