Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை

லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை

லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை

லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை

ADDED : ஆக 31, 2011 11:42 PM


Google News

புதுடில்லி : டில்லியில் பணியாற்றி வரும் போலீசாரில், 1,800 பேர் கடமை தவறியதற்காகவும், 50 பேர் லஞ்சம் வாங்கியதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புள்ளிவிவர கணக்கு தெரிவிக்கிறது.

லஞ்சம் வாங்கிய, 50 போலீசாரில், 25 கான்ஸ்டபிள்கள், 9 ஹெட்கான்ஸ்டபிள்கள், 6 எஸ்.ஐ.,க்கள்., 7 உதவி எஸ்.ஐ.,க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஊழியர்கள் அடங்குவர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்துள்ள, 24 வழக்குகளில் 47 போலீசார் சிக்கியுள்ளனர். உதவி கமிஷனர்கள், தொடர்ந்து திடீர் சோதனை செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us