ADDED : ஆக 28, 2011 11:24 PM
திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை லயன்ஸ், லியோ சங்கம் சார்பில் விளந்தை அரசு மேல் நிலை பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க தலைவர் சையத்அலி, மாவட்ட தலைவர் அம்முரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பிளஸ்1, பிளஸ் 2 மாணவிகள் 52 பேருக்கு ரத்த பரிசோதனை செய்தனர். லயன்ஸ் சங்க துணைத் தலைவர் குழந்தைவேலு, லியோ சங்க முன்னாள் தலைவர் ஹபீஸ், பொருளாளர் பிரேம் ஆனந்த், ஆசிரியர் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.