/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
கடலூரில் புறவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?
தமிழகத்தின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டம், 1984ம் ஆண்டு கடலூர் அடுத்த குடிகாடு கிராமத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.
அதன்படி கடலூர் - புதுச்சேரி சாலையில் (60/2 கி.மீ.,) பெண்ணையாறு பாலத்தை ஒட்டியுள்ள ஆல்பேட்டை சோதனைச் சாவடியின் மேற்குப் பகுதியில் ஆற்றங்கரையில் உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக வெளிச்செம்மண்டலம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், மாவடிப்பாளையம், கண்ணாரப்பேட்டை, காரைக்காடு, குடிகாடு வழியாக சிதம்பரம் சாலையில் (70/6 கி.மீ.,) இணைக்கும் வகையில் 185 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16.200 கி.மீ., தூரத்திற்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் தோராய திட்ட மதிப்பீடு அறிக்கையை தயார் செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தனர்.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்படும். டெண்டர் எடுக்கும் கன்சல்டன்சி நிறுவனம், புறவழிச்சாலை அமைய உள்ள இடங்களைப் பார்வையிட்டும், அப்பகுதிகளில் மண்ணின் தன்மை அறிய ஆழ்துளை போர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப சாலை, பாலம், மேம்பாலங்கள் எந்த வடிவமைப்பில் கட்ட வேண்டும் எனவும், அதற்கான செலவினங்கள் குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும். இந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு அரசு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் முதல் கட்டமாக வருவாய் துறையினரின் உதவியுடன் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கும். இவை அனைத்தும் முடிந்த பிறகே புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கும். இது குறித்து, கடந்த 30ம் தேதி கடலூர் வந்த தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும் சிறப்பு திட்ட அமலாக்க பிரிவு அமைச்சருமான சம்பத், கடலூர் நகர புறவழிச்சாலை திட்டம் குறித்து வரைபடத்துடன் விளக்கி, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு அமைச்சர் எடப்படாடி பழனிச்சாமி, இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான சுழல் நிதி, விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -


