காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பெண் பலி
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பெண் பலி
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பெண் பலி
ADDED : ஆக 22, 2011 12:40 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்குமிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பெண் ஒருவர் பலியானார்.
மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். நேற்றிரவு, குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சலீமா என்ற பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.